கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 2022-23ம் ஆண்டுக்கான மொத்த வரி வசூல் 2,044 கோடியாக அதிகரிப்பு..!

சென்னை மாநகராட்சியில் 2022-23ம் ஆண்டுக்கான மொத்த வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு, 2,044 கோடியாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாநகராட்சியில் 2022-23ம் ஆண்டுக்கான மொத்த வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு, 2 ஆயிரத்து 44 கோடியாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

2022-23-ல் சென்னை மாநாகராட்சி, சொத்து வரியாக 1,500 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், 1,522 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. 2022-23-ல் தொழில் வரி வசூலுக்கு 500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், 521 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஒன்பதாம் மண்டலமான தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக 305 கோடி ரூபாய் சொத்து வரியாகவும், 106 கோடி ரூபாய் தொழில் வரியாகவும் வசூலாகியுள்ளது. 2021-22-ல் மொத்த வரி வசூல் 1,240 கோடி ரூபாயாகவும், 2020-21-ல் 959 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சொத்து வரி செலுத்தாத சுமார் 100 பேரிடம் இருந்து வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலர் சிட்டி பாபு கூறியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்