கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

வைகை அணையின் நீர்மட்டம் அதிரடியாக உயர்வு - வெள்ள அபாய எச்சரிக்கை

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

தேனி, 

தென் மாவட்டங்களில் இடைவிடாது பெய்த கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கொட்டித்தீர்த்த மழையால் திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீராய் காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் நேற்று வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,145 கன அடியாக உள்ளது. இதன் மூலம் அணையின் நீர் மட்டம் 69 அடியை எட்டியுள்ளது. எனவே அணையிலிருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்