தமிழக செய்திகள்

தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

கடையநல்லூர் அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது.

தினத்தந்தி

கடையநல்லூர்:

கடையநல்லூர் கல்லாற்றில், மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் தென்னை, வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள தர்மர் என்ற விவசாயியின் தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னங்கன்றுகளை சேதப்படுத்தியது. 30-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளின் குருத்துகளை யானைகள் சேதப்படுத்தி சென்று விட்டதாக விவசாயி தெரிவித்தார். எனவே வனத்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்