தமிழக செய்திகள்

விபத்தில் தொழிலாளி பலி

பெத்தநாயக்கன்பாளையம் அருகே விபத்தில் தொழிலாளி இறந்தார்.

தினத்தந்தி

பெத்தநாயக்கன்பாளையம்

பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் சோமன் (வயது 42). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தண்ணீர்பந்தல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், சோமன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சோமன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்