தமிழக செய்திகள்

தொழிலாளி, சிகிச்சை பலனின்றி சாவு

தொழிலாளி, சிகிச்சை பலனின்றி சாவு

தினத்தந்தி

ஆனைமலை

ஆனைமலை அருகே மார்ச்சநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுக்கு சாகு(வயது 42) தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடன், வாழைகொம்பு நாகூரை சேர்ந்த சக்திவேல்(49) என்பவரும் வேலை பார்த்தார். இவர்கள் சம்பவத்தன்று வேலை முடிந்ததும் தங்களது உடையில் இருந்த தூசிகளை ஏர் கம்ப்ரசர் மூலம் சுத்தம் செய்தனர். பின்னர் அதன் குழாயை சக்திவேல் விளையாட்டாக சுக்கு சாகுவின் ஆசனவாயில் நுழைத்து இயங்க செய்தார். உடனே ஆசனவாய் வழியாக காற்று புகுந்து வயிறு வீங்கியது. இதனால் சுக்கு சாகு மயங்கி விழுந்தார். உடனே சக தொழிலாளர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சுக்கு சாகு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்