தமிழக செய்திகள்

செண்டுமல்லி பூக்கள் விளைச்சல் அமோகம்

கூடலூர் பகுதியில் செண்டுமல்லி பூக்கள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது.

தினத்தந்தி

தேனி மாவட்டம் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ஒட்டிய பகுதிகளில் தோட்ட விவசாயிகள் அதிக அளவில் செண்டுமல்லி பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை கம்பம் மற்றும் மதுரை பூ மார்க்கெட்டிற்கு கொண்டு போய் விற்பனை செய்கின்றனர். இந்தப் பகுதிகளில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையினால் தற்போது செண்டுமல்லி பூக்கள் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் வி நாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாதம் சிறப்பு பூஜை வழிபாடுகளுக்கு பூக்களின் தேவை அதிகரித்து இருந்தது. இதனால் செண்டு மல்லி பூக்களின் விலையும் உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, ஆயுதபூஜை, சரசுவதி பூஜை மற்றும் திருமணம் உள்ளிட்ட விசஷ நாட்கள் வருவதால் செண்டுமல்லி பூக்களின் தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக செண்டுமல்லி பூக்களின் விலையும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்ப்புடன் பயிரிட்டு உள்ளோம் என்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து