தமிழக செய்திகள்

குடும்பத்துடன் சினிமா பார்க்க சென்றபோதுவீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகை திருட்டு

தினத்தந்தி

தர்மபுரி வெண்ணாம்பட்டி நந்தி நகரை சேர்ந்தவர் சாதிக் பாஷா (வயது 43). தர்மபுரியில் பீரோ கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்தோடு சினிமா பார்க்க சென்றார். நள்ளிரவில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகை திருடு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்