தமிழக செய்திகள்

காட்டாங்கொளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை-பணம் திருட்டு

காட்டாங்கொளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை-பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

தினத்தந்தி

பூட்டு உடைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 65). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சூளைமேடு பகுதியில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை-பணம் கொள்ளை

இதையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 25 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சுதர்சன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்