தமிழக செய்திகள்

வல்லூர் அனல்மின் நிலையத்தில் 15 டன் இரும்பு பொருட்கள் திருட்டு - டிரைவர் உள்பட 4 பேர் கைது

வல்லூர் அனல்மின் நிலையத்தில் 15 டன் இரும்பு பொருட்கள் திருட்டிய டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மீஞ்சூரை அடுத்த வல்லூர் கிராமத்தில் மத்திய அரசின் தேசிய அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு மேற்பார்வையாளராக சதீஷ்குமார் (வயது 33), பாதுகாப்பு அலுவலராக அக்பர் (27), மற்றொரு பிரிவில் மேற்பார்வையாளராக சரண்ராஜ் (29) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள், வல்லூர் அனல் மின் நிலையத்தில் இருந்து ஒரு லாரியில் 15 டன் பழைய இரும்புகளை அதே பகுதியில் உள்ள பாதுகாப்பு கிடங்கில் இறக்காமல் அனல்மின் நிலையத்துக்கு வெளியே குருவிமேடு கிராமத்தின் வழியாக கொண்டு சென்று விற்க முயன்றனர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் லாரியை மடக்கிப்பிடித்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார், அக்பர், சரண்ராஜ் மற்றும் லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர சேர்ந்த பதிஷ்குமார் (52) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்