தமிழக செய்திகள்

கோவிலில் உண்டியல் பணம் திருட்டு

தினத்தந்தி

கொல்லங்கோடு, 

கொல்லங்கோடு அருகே உள்ள நடுவத்தன்முறி பகுதியில் வனதுர்கா கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பூஜைகள் முடிந்து அனைவரும் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலையில் கோவில் செயலாளர் ஜெயதனேஷ் கோவிலுக்கு வந்த போது முன்பக்கம் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் திருடு போய் இருந்தது. இரவில் யாரோ மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து ஜெயதனேஷ் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு