தமிழக செய்திகள்

தாமிர கம்பிகள் திருட்டு

நெல்லையில் தாமிர கம்பிகள் திருட்டு போனது

தினத்தந்தி

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள மேட்டு பிராஞ்சேரியில் தனியாருக்கு சொந்தமான சோலார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் காவலாளியாக நாங்குநேரி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்த முருகன் (வயது 48) என்பவர் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் நிறுவனத்தின் வளாகத்தில் பார்த்தார். அப்போது அங்கு ஒரு மூலையில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 300 கிலோ எடை கொண்ட தாமிர கம்பிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் உடனடியாக கங்ககொண்டான் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமிர கம்பிகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு போன தாமிர கம்பிகளின் மதிப்பு ரூ.90 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு