தமிழக செய்திகள்

வாகன தொழிற்சாலையில் இரும்பு பொருட்கள் திருட்டு: இலங்கை வாலிபர்கள் 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டியில் வாகன தொழிற்சாலையில் இரும்பு பொருட்களை திருடிய இலங்கை வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான வாகன கட்டுமான தொழிற்சாலை பல வருடங்களாக மூடிக்கிடக்கிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த 23-ந் தேதி சுமார் 100 கிலோ எடை கொண்ட இரும்பு குழாய்கள் திருட்டு போனது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மூடப்பட்ட தொழிற்சாலையில் இரும்பு குழாய்கள் திருடிய வழக்கில் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தர்மராஜ் (வயது 32), பிரதீப் (28), ராஜ்குமார் (36) ஆகிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்