தமிழக செய்திகள்

பலசரக்கு கடையில் பணம் திருட்டு

தென்காசியில் பலசரக்கு கடையில் பணம் திருடு போனது.

தினத்தந்தி

தென்காசி அணைக்கரை தெருவை சேர்ந்தவர் எகியா அலி (வயது 53). இவர் சுவாமி சன்னதி பஜாரின் கீழ் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.64 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை. கதவு பூட்டி கிடந்த நிலையில் பணம் திருட்டு போனது எப்படி என்று பார்த்தார். அப்போது கடையின் ஒரு பக்க சுவரில் துளை போட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் சுவரில் துளை போட்டு பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தென்காசி போலீசில் எகியா அலி செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்