தமிழக செய்திகள்

தேனி, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு மஞ்சளாறு அணையில் இருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறப்பு

தேனி, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு மஞ்சளாறு அணையில் இருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறக்கப்படுகிறது

தினத்தந்தி

தேவதானப்பட்டியில் மஞ்சளாறு அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 57 அடி ஆகும். இதில் அணையின் பாதுகாப்பு கருதி 55 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதாறும் முதல் போக பாசனத்திற்கு அக்டோபர் மாதம் 15-ந்தேதி அணையில் இருந்த தண்ணீர் திறப்பது வழக்கம்.

இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை பெய்ததால் ஜூலை 31-ந்தேதி அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து தற்போது வரை நீர்மட்டம் 55 அடியிலேயே நீடிக்கிறது. இதனால் வழக்கம்போல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு