தமிழக செய்திகள்

தேனியில் 4 மாதங்களுக்கு பிறகு 2 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது

தினத்தந்தி

 தேனி மாவட்டத்தில் கடந்த 117 நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்த 4 மாத காலமாக தினமும் சராசரியாக 40-ல் இருந்து 50 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. அதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தேனியில் 4 மாத இடைவெளிக்கு பிறகு இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட 34 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 2 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட 2 பேரும் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு