தமிழக செய்திகள்

வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது என அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பெரும்பாலான இடங்களை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடைபெற்று உள்ளதாக அதிமுக சார்பாக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பாபு முருகவேல் நேற்று புகார் மனுவை அளித்து உள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாபு முருகவேல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் அ.தி.மு.க. முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பெரும்பான்மையான இடங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை என்றார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க.-வினருக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் பாபு முருகவேல் குற்றஞ்சாட்டினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்