தமிழக செய்திகள்

செந்தில் பாலாஜி அமைச்சராக எந்தவித தடையும் இல்லை - ஆர்.எஸ்.பாரதி

செந்தில் பாலாஜி அமைச்சராக நியமனம் செய்யும் முடிவை முதல்-அமைச்சர் எடுப்பார் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பேசியதாவது;

"செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எவ்வித தடையும் இல்லை. எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் 15 மாத காலம் செந்தில் பாலாஜி சிறையில் இருந்துள்ளார். பாஜக எதிர்க்கட்சிகள் மீது இதுபோன்று பொய்யான வழக்குகளை பதிவு செய்வதை விடுத்து திருந்த வேண்டும் இல்லாவிட்டால் அவர்களுக்கு கேடுகாலம் தான். செந்தில் பாலாஜி அமைச்சராக நியமனம் செய்யும் முடிவை முதலமைச்சர் எடுப்பார் அமைச்சரவை மாற்றம் குறித்த பதிலை ஏற்கனவே முதலமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்"

இவ்வாறு அவர் பேசினார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை