சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை 24 சதவீதம் குறைவாக பெய்து உள்ளது. வடகிழக்கு பருவமழை பதிவான அளவு 34 செ.மீ. இது வழக்கத்தைவிட 24 சதவிகிதம் குறைந்துள்ளது. வானிலை நிகழ்வுகள் சாதகமாக இல்லாததே பருவமழை குறைவுக்கு காரணம் . எல் நினோ உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இது தள்ளிப்போனதால் மழை இல்லை. 4 புயல்களில் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்பட்டது. அதனாலேயே மழையின் அளவு குறைந்து உள்ளது.
சென்னையில் இயல்பைவிட 55 சதவீதம் மழை குறைவாக பதிவாகியுள்ளது என கூறி உள்ளார்.