தமிழக செய்திகள்

"கால் வைக்ககூட இடம் இல்லை".. தனியார் பேருந்துகளில் அலைமோதும் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் முண்டியடித்து காணப்பட்டது.

தினத்தந்தி

புதுக்கேட்டை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில், புதுக்கேட்டை மாவட்டத்தில் இன்று தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் முண்டியடித்து காணப்பட்டது.

கல்லூரி மாணவர்கள், பெதுமக்கள், பணியாளர்கள் பேருந்தில் நிற்க கூட இடமின்றி மிகவும் சிரமத்திற்கு இடையே பயணித்துள்ளனர்.

புதுக்கோட்டையில் 6 பணிமனைகளில் இருந்து 75 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் கூறினாலும் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்