தமிழக செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.97 ½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு செல்ல வந்தவரிடம் இருந்து ரூ.97 ½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ஷார்ஜாவுக்கு செல்ல வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த வாசிம் அக்ரம் (வயது 30) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அவரிடம் இருந்த கைப்பையில் உள்ள ரகசிய அறையில் கட்டுக்கட்டாக சவுதி ரியால்களை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.97 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக வாசிம் அக்ரமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்