தமிழக செய்திகள்

திருச்செந்தூர்: சூரசம்ஹார நிகழ்வை பார்க்க பக்தர்களுக்கு தடை - மாவட்ட நிர்வாகம்

சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகளை உள்ளூர் தொலைக்காட்சி மற்றம் யூடியூப் சேனல்கள் மூலமாக கண்டுகளிக்குமாறு பக்தர்களுக்கு மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருச்செந்தூர்,

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா வரும் நவம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.

வெகு விமரிசையாக நடைபெறும் இந்த கந்தசஷ்டி திருவிழாவில் வருடந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு மேலாக கலந்து கொள்வர். கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கந்தசஷ்டி திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 9-ந்தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் மற்றும் 10-ந்தேதி நடைபெறும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பத்தாயிரம் நபர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழை காண்பித்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கந்தசஷ்டி திருவிழாவில் தனிநபர் அன்னதானத்திற்கு தடை விதிக்கப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் மூலம் வழங்கப்படும் அன்னதானத்திற்கு மட்டும் அனுமதி கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் சுற்று வட்டாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த கந்தசஷ்டி திருவிழாவில் உள்ளூர் போலீசார் 1500 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகளை உள்ளூர் தொலைக்காட்சி மற்றம் யூடியூப் சேனல்கள் மூலமாக கண்டுகளிக்குமாறு பக்தர்களுக்கு மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது