தமிழக செய்திகள்

திருச்செங்கோட்டில்10-ம் ஆண்டு அறுபத்து மூவர் விழா

தினத்தந்தி

எலச்சிபாளையம்:

திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவிலான நிலத்தம்பிரான் கோவில் எனப்படும் சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோவிலில் 10-ம் ஆண்டு அறுபத்து மூவர் விழா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை, திருச்செங்கோடு அருள்நெறி வார வழிபாட்டு கூட்டம், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விழா நடந்தது.

விழாவில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண தடை உள்ளவர்கள், கல்வி, வேலைவாய்ப்பு, வியாபாரம், கடன்சுமை, உடல்நலம் குறைபாடுகள் நீங்க மல்லிகை|, முல்லை, தும்பை, அரளி, தாமரை, எருக்கன் உள்ளிட்டவை கொண்டு பூச்சொரிதல் விழா நடந்தது.

நேற்று காலை கணபதி வழிபாடு, மூலமந்திர ஹோமம், மூலவர் திருமேனிகள், ஐம்பெரும் மூர்த்திகள், அறுபத்து மூவர் மற்றும் தொகை அடியார்கள், உற்சவர் திருமேணிகளுக்கு திருமஞ்சன அபிஷேகம், அலங்காரம், திருமுறை பாராயணம், பேரொளி வழிபாடு நடந்தது. இதனை தொடர்ந்து ஐம்பெரும் மூர்த்திகள், அறுபத்து மூவர் திருமேனிகள் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிவகண வாத்தியங்கள் முழங்க திருச்செங்கோட்டில் உள்ள 4 ரத வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து