அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்தர் ஐக்கிய ஜோதி விழா நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் திருஞானசம்பந்தர் பல்லக்கில் பிரகார உலாவும், திருஞானசம்பந்தர் மூல நட்சத்திர ஜோதியில் ஐக்கிய நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திருவடிக்குடில் சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.