தமிழக செய்திகள்

சீதாராமர் திருக்கல்யாண உற்சவம்

தர்மபுரி அருகே சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

தர்மபுரி அருகே முக்கல்நாயக்கன்பட்டி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சீதாராமர் திருக்கல்யாண உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சீதாதேவி பெண் அழைப்பும், சீர்வரிசை அழைப்பும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று யாகசாலை பூஜைகளும், சாமிக்கு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு