தமிழக செய்திகள்

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண விழா நேற்று நடந்தது.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் சாமி வீதிஉலா வந்து கோவிலில் உள்ள 100 கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் கண்டருளி பின்னர் கோவில் கண்ணாடி அறைக்கு எழுந்தருளினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண விழா நேற்று நடந்தது.

பின்னர் இருவரும் கோவில் 100 கால் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

SCROLL FOR NEXT