சென்னை,
விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த தினத்தை முன்னிட்டு விக்கிரவாண்டியில் நேற்று அக்கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும்போது, இனி தவெக உடன் விசிக இணைந்து செயல்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யை பார்ப்பதற்காக திருமாவளவன் சென்னை தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். அவருடன் அமைச்சர் வன்னி அரசுவும் உள்ளார். தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார். தவெக உடன் விசிக இணைந்து செயல்படும் என திருமாவளவன் கூறிய பின்னர் நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.