தமிழக செய்திகள்

திருவாரூர்: ஆம்னி பஸ் கவிழ்ந்து 8 பேர் காயம்

விபத்தில் சிக்கி காயமடைந்த நபர்களை போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சென்னை

சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் ஒன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தென்குடி என்ற பகுதியில் வந்தபோது, திடீரென சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில், பஸ்சில் இருந்த பயணிகளில் 8 பேர் காயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விபத்தில் சிக்கி காயமடைந்த நபர்களை மீட்டு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். விபத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.