சென்னை,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ந்தேதி கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. மேலும், கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதன் அடையாளம் இது",என்று பதிவிட்டுள்ளார்.