தூத்துக்குடி,
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த டிக்சன்(எ) சுல்தான் (வயது 23) மற்றும் இருதயஜாஸ்பர்(28) ஆகிய 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் உத்தரவின் பேரில் மேற்சொன்ன 2 பேரையும் நேற்று வடபாகம் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.