தமிழக செய்திகள்

தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருச்செந்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர், மெஞ்ஞானபுரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலைகண் மகன் கார்த்திக் (வயது 26), சாத்தான்குளம் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் ஆறுமுகம்(51) ஆகிய 2 பேரும் மெஞ்ஞானபுரம் பகுதியில் கடந்த 10.10.2025 அன்று நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் கார்த்திக், ஆறுமுகம் ஆகிய 2 பேரையும் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து