தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 அடி நீள சாரைப்பாம்பு உள்ளே புகுந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், அங்கு விரைந்து வந்த தூத்துக்குடி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான பணியாளர்கள் அந்த பாம்பினை பாதுகாப்பாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.