தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் கால ஒத்திகை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மாவட்ட அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் ராஜு, நிலைய உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி மற்றும் பணியாளர்கள் பங்கு பெற்று ஒத்திகை பயிற்சிகளை மேற்கெண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் பிற துறையை சேர்ந்த அலுவலர்கள் பங்கு பெற்று பயன்பெற்றனர்.