தமிழக செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு -அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

இந்திய காவல் பணி அலுவலர்கள் உள்ளிட்ட 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

தினத்தந்தி

சென்னை,

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அதில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரித்து நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், இந்திய காவல் பணி அலுவலர்கள் உள்ளிட்ட 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது தேவையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இந்தப் பரிந்துரை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அவை பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை