தமிழக செய்திகள்

தூத்துக்குடி மாணவி கொலை: கைதானவர் குறித்து பகீர் தகவல்

மூதாட்டியை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பிணையில் வந்தபோது மற்றொரு கொலை செய்துள்ளார்.

தூத்துக்குடி,

12-ம் வகுப்பு மாணவி கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். மாணவி கொலைக்கு நீதி கேட்டு உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில்,

தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை கைது செய்துள்ளது காவல்துறை.

இந்தநிலையில், விளாத்திக்குளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் கைதானவர் குறித்து பகீர் தகவல் வெளியாகி உள்ளது. 2020-ல் எட்டயபுரம் கீழஈராலில் 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர் முனீஸ்வரன் என்பதும், மூதாட்டியை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பிணையில் வந்தபோது மற்றொரு கொலையும் செய்துள்ளார்.

வழக்கில் 2 ஆண்டுகள் கழித்து தர்ம முனீஸ்வரனை கைது செய்திருந்தது காவல் துறை. தர்ம முனீஸ்வரன், காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்தபோது வேடநத்ததில் மாணவியை கொலை செய்துள்ளார் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் போலீசாரின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மாணவியின் உடலைப் பெற குடும்பத்தினர் சம்மதம் என தகவல் வெளியாகி உள்ளது.