தமிழக செய்திகள்

தூத்துக்குடி: புதிய கலெக்டராக விஷு மகாஜன் பொறுப்பேற்றார்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த இளம்பகவத் தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த இளம்பகவத் தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் அவருக்குப் பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டராக விஷு மகாஜன் என்பவரை நியமித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ககெ்டராக விஷு மகாஜன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.