தமிழக செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவியின் ஆபாச படத்தை வெளியிட போவதாக மிரட்டல்

பாலியல் பலாத்காரம் செய்து 10-ம் வகுப்பு மாணவியின் ஆபாச படத்தை வெளியிட போவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராகவன் (வயது 21). இவர் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் மனு கொடுத்தார்.

அதில், கார்த்திக் ராகவன் எனது உறவினர் ஆவார். அதை நம்பி 10-ம் வகுப்பு படிக்கும் எனது மகளை 'ஆன்லைன்' விளையாட்டு கற்பதற்காக அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் 'ஆன்லைன்' விளையாட்டு கற்பித்து தருவதாக கூறி எனது மகளிடம் தவறாக பழகி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். அந்த தவறான உறவை தனது செல்போனில் வீடியோ படமும் எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த படங்களை இணையதளத்தில் வெளியிட போவதாக மிரட்ட ஆரம்பித்தார். இதை கண்டித்தபோது அவர் தொடர்ந்து மிரட்டி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த புகார் மனு மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

எனவே பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார், கோர்ட்டு உதவியை நாடினார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த பிரிவு போலீசார் உரிய விசாரணை நடத்தி கார்த்திக் ராகவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்பேரில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் ராகவனை கைது செய்தனர்.

கொரோனா காலத்தில் நடந்த இந்த சம்பவத்துக்கு இப்போது தான் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்