தமிழக செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்பட 3 பேர் இலங்கை பயணம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்பட 3 பேர் இன்று இலங்கை புறப்பட்டு சென்றனர்.

தினத்தந்தி

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளான பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு விடுதலை செய்தது. இவர்களில் முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

இதில் சாந்தன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி உயிரிழந்தார். எஞ்சிய 3 பேரும் தங்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க அரசிடம் விண்ணப்பித்தனர். பின்னர், கோர்ட்டு தலையீட்டை தொடர்ந்து 3 பேரும் இலங்கைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், முருகன், ஜெயக்குமார், ராபர்ட்பயஸ் ஆகிய 3 பேரும் இன்று இலங்கை அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 3 பேரும் நேற்று சென்னை அழைத்து வரப்பட்டனர். பின்னர், 3 பேரும் இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு சென்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து