தமிழக செய்திகள்

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திசையன்விளையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தினத்தந்தி

திசையன்விளை அந்தோணியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்த வேத ஆசீர்வாதம் என்பவரின் மகன் தனசிங் (வயது 34). இவர் ஒரு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளைங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து அடிதடி, கொலை முயற்சி மற்றும் திருட்டு போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

கலெக்டர் கார்த்திகேயன் இதனை ஏற்று தனசிங்கை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை வள்ளியூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்