தமிழக செய்திகள்

திருநெல்வேலி: புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்- ரூ.25 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் உள்ள பெட்டிக்கடையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுடேனி சோதனை செய்தார்.

தினத்தந்தி

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியை சேர்ந்த உசேன் மகன் ஹாஜாமுகைதீன் (வயது 54) என்பவர் வீட்டிற்கு அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுடேனி சோதனை செய்தார். அப்போது அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய வைத்திருந்ததற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உணவு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்து கடையை 15 நாட்களுக்கு சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.

களக்காடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுடேனி மற்றும் ஏர்வாடி காவல்துறையினர் முன்னிலையில் ஹாஜாமுகைதீனின் கடையை சீல் வைத்து அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்