திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நகை கடை ஒன்றில், 19 வயது இளம்பெண் ஒருவர், நகை வாங்குவது போல் நடித்து தன்னிடம் இருந்த போலி நகையை வைத்து, 2 கிராம் தங்க மோதிரத்தை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண் நகையை மாற்ற முயன்றபோது, கடை உரிமையாளர் அவரை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணிடம் இருந்து பல போலி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.