தமிழக செய்திகள்

திருப்பூர்: கார் மீது சரக்கு வேன் மோதி விபத்து - 2 பெண்கள் படுகாயம்...!

திருப்பூர் அருகே கார் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்

தினத்தந்தி

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காங்கேயத்தில் இருந்து கோவை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே பல்லடத்தில் இருந்து பொங்கலூர் நோக்கி சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் காரில் வந்த 5 பேரில் 2 பெண்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்