திருப்பூர்,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
திருப்பூர் மாவட்டம், 4 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம், தளவாய்பட்டிணம், தாராபுரம் மற்றும் கொளிஞ்சிவாடி வரை) பாசனப் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு, அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 400 கன அடி வீதம், 207.36 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டம், அமராவதி புதிய பாசனப் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு, அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக வினாடிக்கு 380 கன அடி வீதம், 164.16 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், 16.02.2026 முதல் 28.02.2026 வரையிலான காலத்தில், தகுந்த இடைவெளிவிட்டு, மொத்தம் 371.52 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதி அணையிலிருந்து பாசனப் பயிர்களை காப்பாற்றும் பொருட்டு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 32880 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி