தமிழக செய்திகள்

திருப்பூர் குமரன் பிறந்த நாள்: ‘தேசத்திற்காக கடைசி நொடி வரை போராடியவர்’ - எடப்பாடி பழனிசாமி புகழாரம்

தேசத்திற்காக கடைசி நொடி வரை போராடிய திருப்பூர் குமரனை அவரது பிறந்த நாளில் போற்றி மகிழ்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தேசத்திற்காக கடைசி நொடி வரை போராடி தன்னுயிர் நீத்த திருப்பூர் கொடி காத்த குமரனை அவரது பிறந்த நாளில் போற்றி மகிழ்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

விடுதலை வேட்கையும், தேசப்பற்றுமே உயிரெனக் கொண்டு, சுதந்திரப் போரில் செங்குருநீர் தெறிக்க மண்ணில் விழுந்த போதிலும் தேசியக் கொடியினை விழாது தாங்கி பட்டொளி வீசி பறக்கச் செய்த கொடிகாத்த திருப்பூர் குமரன் பிறந்த நாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் நினைவில் ஏந்தி போற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை