தமிழக செய்திகள்

திருவண்ணாமலை: கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து..4 பேர் உயிரிழப்பு

காட்டுக்குளம் பகுதி அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருவண்ணாமல,

திருவண்ணாமலை அருகே நேற்று இரவு கார்- அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். சோமாசிபாடி அடுத்த காட்டுக்குளம் பகுதி அருகே நள்ளிரவு 3:30 மணிக்கு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து கீழ்பெண்ணாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்