தமிழக செய்திகள்

மழை, வெள்ள பாதிப்பு - தூத்துக்குடியில் தலைமைச்செயலாளர் ஆய்வு...!

பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் சீரமைப்பு பணிகள், நீர் வடிகால் பணிகளை தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பார்வையிட்டு வருகிறார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி நகர், கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் ஏரல், ஆத்தூர் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது, மழை நின்று வெள்ளநீர் வடிந்து வருகிறது. ஆனால், பல பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள், நீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதேவேளை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு சென்று பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.

இந்நிலையில், தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடியில் மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் சீரமைப்பு பணிகள், நீர் வடிகால் பணிகளை சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு வருகிறார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்