தமிழக செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் மேலும் 23,888- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 41 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 29-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 15,036- ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 8,305- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்து 171 ஆக உயர்ந்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து