தமிழக செய்திகள்

சாராய விற்பனையை தடுக்க வேண்டும்

சாராய விற்பனையை தடுக்க வேண்டும்

தினத்தந்தி

திருவாரூர்:

திருவாரூர் அருகே நெடுஞ்சேரியில் சாராய விற்பனையை தடுக்கக்கோரி கிராம மக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோரிக்கை மனு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா நெடுஞ்சேரி கிராம மக்கள் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குடவாசல் தாலுகா நெடுஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக சாராயம் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதான சாலை பகுதிகளில் சாராயம் விற்பனை செய்வதால் தினமும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், அந்த வழியாக செல்லும் பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சாராய விற்பனையால் பலரும் குடிக்கு அடிமையாகுவதால், அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கோவில்பத்து பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில் கணவர் குடிக்கு அடிமையாகியதால், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தடுக்க நடவடிக்கை

இதுகுறித்து பலமுறை போலீசில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே திருவாரூர் அருகே நெடுஞ்சேரியில் சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு