தமிழக செய்திகள்

புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

சீர்காழி அருகே புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது 2,250 பாக்கெட்டுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல்

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை சாலை மேல செங்கமேடு என்ற இடத்தில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த நபரை விசாரணை செய்ததில் அவர் திண்டுக்கல் மாவட்டம் செந்துறை கழுவடி மலை பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் கோபி (வயது 28) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து சீர்காழி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2250 புகையிலை பாக்கெட்டுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு