தமிழக செய்திகள்

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்தவாரம் ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று 65 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை ரகத்திற்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரை விற்பனையான நிலையில், இன்று ரூ.80 வரையும், கோயம்பேட்டிற்கு வெளியே ரூ.90 வரையும் தக்காளி விற்கப்படுகிறது.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாய்க்கும், ஒரு கிலோ பீன்ஸ் 110 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உருளை கிலோ ரூ.38, கேரட் கிலோ ரூ.40, தேங்காய் கிலோ ரூ.52, இஞ்சி கிலோ ரூ.150, மாங்காய் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்வு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 110 லாரிகளில் தக்காளி வரும் நிலையில், தற்போது 60 முதல் 75 லாரிகள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து