தமிழக செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

அம்பை:

மணிமுத்தாறு அருவி பகுதியில் கடந்த 4 நாட்களாக வனத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT